Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை தள்ளி விட்ட மனைவி.. எதிர்பாராத உயிரிழப்பு.. விடுவிக்க போலீசார் முடிவு..!

Mahendran
வெள்ளி, 5 ஜனவரி 2024 (17:27 IST)
கணவரை மனைவி தள்ளிவிட்ட நிலையில் கணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் மனைவியை விடுவிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் மது போதையில் மனைவியை தொடர்ந்து அடித்து கணவர் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் சண்டை கொண்டிருக்கும் போதும் மனைவியை கணவர் கொடுமைப்படுத்திய நிலையில் மனைவி  கணவரை தள்ளிவிட்டார். 
 
இதனை அடுத்து படுகாயம் அடைந்த கணவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்த மனைவியை விடுவிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தற்காப்புக்காக தான் கணவரை தள்ளியது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து சட்ட பிரிவு 100ன் கீழ் அவரை விடுவிக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.  வீட்டு வேலை செய்து வருமானம் ஈட்டும் அந்த பெண்ணுக்கு  இரண்டு பிள்ளைகள் இருப்பதால் அவர்களுடைய எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு அவரை விடுதலை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments