Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார்

நடிகர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார்

நடிகர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார்
, செவ்வாய், 31 மே 2016 (06:24 IST)
சென்னை, அடையாறு மேம்பாலத்தில் நடிகர் சூர்யா, தன்னை தாக்கியதாக பிரவீண்குமார் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

 
சென்னை, பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரவீண்குமார் (21) தனது பைக்கில் நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி சென்று கொண்டு இருந்த போது, அடையாறு திருவிக மேம்பாலத்தில்  முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென்று பிரேக்  போடவே அந்த கார் மீது பிரவீண்குமார் பைக் மோதியது.
 
இதில், தவறு யார் மீது என்று, அந்த காரை ஓட்டி வந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கார் உரிமையாளரான அந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
அப்போது அந்த வழியாக காரில் வந்த நடிகர் சூர்யா தனது காரை விட்டு கீழே இறங்கி, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கி,  பிரவீண்குமார் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார். இதில்பிரவீண்குமார்  நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அங்கு கும்பல் கூடவே, நடிகர் சூர்யா அங்கிருந்து எஸ்கேப்பாகிவிட்டார்.
 
கன்னத்தில் பளார் வாங்கிய பிரவீண்குமார் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு, காரணம் இன்றி தன்னை நடிகர் சூர்யா தாக்கியதாக கூறி சாஸ்திரிநகர் காவல் நிலயைத்தில்  புகார் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.570 கோடி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? : கருணாநிதி கேள்வி