Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினாவில் 1000 போலீசார் குவிப்பு - சென்னையில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (15:27 IST)
மெரினா கடற்கரை நுழைவாயிலில் போராட்டம் நடத்தாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
இலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு சில இயக்கங்கள் திட்டமிட்டன. ஆனால், மெரினாவில் போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆயினும், நீதிமன்ற உத்தரவை மீறி இதை நடத்தியே தீருவோம் என சில அமைப்புகள் அறிவித்துள்ளன.
 
எனவே, மெரினா, சேப்பாக்கம் பகுதியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடையை மீறி மெரினாவில் நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை மெரினாவில் நடத்தினார். எனவே, போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments