Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேட்டில் பயணிகள் மீது தடியடி நடத்திய போலீஸார்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (06:35 IST)
இன்று தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் செல்ல சென்னை கோயம்பேட்டில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். ஆனால் கூடுதல் கட்டணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி 1 அல்லது 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வருவதால் காலைக்குள் எப்படி ஊருக்கு சென்று வாக்களிப்பது என்றும் பயணிகள் அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்
 
இந்த நிலையில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்ட நிலையில் கூடுதல் கட்டணத்தால் செய்வதறியாது போராட்டம் நடத்திய பயணிகள் மீது போலீசார் திடீரென் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
போலீசார் துரத்தி துரத்தி அடித்ததில் பயணிகளில் பலருக்கு காயம் என தகவல் வெளிவந்துள்ளது.  கூடுதல் கட்டணம் குறித்து யாரிடம் புகார் அளிப்பது ? என்று கேட்டதற்கு தடியடி நடத்துகிறார்கள் என்றும் பயணிகள் புகார் கூறினர்
 
பயணிகள் சொந்த ஊர் செல்வதற்காக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக பயணிகள் குவிந்துள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு மேலும் 250 பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments