Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாஜக, விஷ்வ ஹிந்து அமைப்பினர் கைது!

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (14:40 IST)
கோவையில் கடந்த வாரம் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூரில் வேதாம்பாள் நகர் அருகே இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் பள்ளிவாசல் உள்ளது. கடந்த 4ம் தேதி நள்ளிரவி சில அடையாளம் தெரியாத நபர்கள் இந்த பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடினர்.

இந்த சம்பவம குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டதை கண்டறிந்துள்ளனர். அதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடியபோது பாஜக கட்சியை சேர்ந்த பாண்டி என்பவரும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த அகில் என்பவரும் பிடிப்பட்டனர்.

விசாரணையில் இந்து முன்னணி பிரமுகர் ஆனந்தன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்வினையாக பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments