Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரை கொரோனாவோடு தொடர்புப்படுத்தி பேசிய நபர்! – கைது செய்த போலீஸார்!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (10:31 IST)
தமிழக அமைச்சர் ஒருவரை கொரோனாவோடு தொடர்புபடுத்தி பேசி வீடியோ வெளியிட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த பொறியாளார் சுதர்சன். இவர் சமூக செயலி ஒன்றில் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்களை திட்டி பேசி அடிக்கடி பதிவிட்டு வந்துள்ளார். சமீபத்தில் பரவிய கொரோனா வைரஸ் அமைச்சர் ஒருவரின் சாயலில் இருப்பதாக கிண்டல் செய்து இவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதை தொடர்ந்து ரியாஸ்கான் என்ற அதிமுக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீஸாரால் சுதர்சன் கைது செய்யப்பட்டார். சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments