Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடிஐ மாணவருக்கு கத்திக்குத்து: 3 பேர் அதிரடி கைது!

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (18:48 IST)
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஐடிஐ மாணவன்  ஒருவரை ஒடஒட விரட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கிண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தவர் ரஞ்சித். 19 வயதான இவர் தனது பெற்றோர்களுடன் நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி தனது நண்பரின் அக்கா குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக சென்றவர், நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் பிணமாக கிடந்துள்ளார்.
 
இவரை மர்ம நபர்கள் ஒடஒட விரட்டி கொலை செய்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்தக் கொலை தொடர்பாக போலிஸார் 2 தனிப்படை அமைத்து விசாரித்ததில், வடபழனினயச் சேர்ந்த கார்த்திகேயன், சாலி கிராமத்தைச் சேர்ந்த நவின் குமார், போரூரைச் சேர்ந்த சிவ கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் கைதான 3 பேரும் செல்போன் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என போலீஸார்க்கு தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments