Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் பே மூலம் லஞ்சம்.. கடலூர் தலைமை காவலர் சஸ்பெண்ட்..!

Mahendran
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (12:49 IST)
கடலூரில் தலைமை காவலர் கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடலூரில் உள்ள சோதனை சாவடி ஒன்றில் வாகன சோதனை நடந்து கொண்டிருந்த நிலையில் அதில் தலைமை காவலர் சக்திவேல் என்பவர் அந்த வழியாக வந்த மாணவர்களின் வாகனங்களை ஆய்வு செய்தார். 
 
அப்போது அவர் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கூகுள் பே மூலம் பத்தாயிரம் லஞ்சம் கொடுத்ததை ஆதாரத்துடன் கடலூர் மாவட்ட எஸ்பிக்கு இமெயில் மூலம் மாணவர்கள் புகார் அளித்தனர். 
 
இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்பி ராஜாராம் அவர்கள் விசாரணை செய்ததில் காவலர் சக்திவேல் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கூகுள் பே மூலம் லஞ்சம் கொடுத்ததை மாணவர்கள் ஆதாரத்துடன் எஸ்பி இடம் புகார் அளித்ததை அடுத்து அந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழை..! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments