Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன். ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு - சேலத்தில் பரபரப்பு

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (11:30 IST)
டெல்லி ஜவகர்ஹால் நேரு பலகலைக்கழக மாணவர் முத்துகிருஷ்னன் சமீபத்தில், அவர் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. 


 

 
அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களும், அவர் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என அறிக்கை அளித்தனர். ஆனால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என முத்துகிருஷ்ணனின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில், அவரின் உடல் நேற்று டெல்லியிலிருந்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்திற்கு எடுத்து வரப்பட்டது. அவருக்கு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று சேலம் வந்தார். ஆனால், அவருக்கு சில மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். 
 
அந்நிலையில், முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவர், செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது யாரோ செருப்பை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த போலீசார், அவர் மீது காலணி வீசிய ஒருவரை பிடித்து சென்றனர். 
 
முத்துகிருஷ்ணன்  தற்கொலை தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என அவர் பேட்டியளித்தார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments