Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மீது ஒருதலை காதல்: கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்!

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (11:19 IST)
தமிழ் சினிமா புதுமுக நடிகை ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் “ஆடி போனா ஆவணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதி. இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே இவரது தூரத்து உறவுமுறையான அமுதன் என்ற வாலிபர் இவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை ஸ்ருதி ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த வாலிபர் ஸ்ருதிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதியின் தாய் சித்ராவை அமுதனும் அவரது தந்தை ராஜசேகரனும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில் போலீஸார் அமுதனையும், ராஜசேகரனையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments