Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கெட்ஸ் போட்டு காத்திருந்த ரௌடி கும்பல்! – வளைத்து பிடித்த போலீஸார்!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (13:40 IST)
திரிபுவனம் அருகே மற்றொரு கும்பலை தாக்குவதற்காக கண்மாயில் பதுங்கியிருந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருபுவனம் அருகே உள்ள மேலராங்கியத்தை சேர்ந்தவர் லோடு முருகன். இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தற்போது சிறையில் உள்ளார். இவருக்கும் கட்டனூரை சேர்ந்த சிலருக்கும் நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கட்டனூர் கும்பலை கொலை செய்ய லோடு முருகனின் மனைவி காளீஸ்வரி திட்டமிட்டதாக தெரிகிறது.

இதற்காக கூலிப்படையினர் சிலரை தயார் செய்து கொண்டு புதுக்குளம் கண்மாய் பகுதிக்குள் காளீஸ்வரி பதுங்கி இருந்துள்ளார். அதேசமயம் அந்த வழியாக சாலைகளில் சென்ற சிலரை மறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி அந்த கும்பல் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மானாமதுரை காவல்துறையினருக்கு தகவல் தெரிய வரவும் டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் மூன்று குழுக்களாக பிரிந்த போலீஸார் கூலிப்படை பதுங்கியிருந்த கண்மாய் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.

அங்கு நடத்திய அதிரடி சோதனையில் காளீஸ்வரி மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 20 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments