Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவா நடந்துக்குவார்னு நினைச்சேன்! மகளை சீரழித்த தந்தை! – தற்கொலைக்கு முயன்ற தாய்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:11 IST)
நாமக்கல் அருகே தனது மகளை கணவரே பாலியல் கொடுமை செய்ததை தாங்க முடியாமல் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் சேந்தமங்கலம் அருகே பட்டத்தையன்குட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பரமநாதன் என்ற லாரி டிரைவரை திருமணம் செய்து கொண்டு மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார் அந்த பெண்.

தாயார் வேலைக்காக வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மகளை பரமநாதன் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வேலை முடிந்து வந்த தாயிடம் நடந்ததை சொல்லி கதறி அழுத்துள்ளார் அவரது மகள்.

தனது கணவனே மகளை இவ்வாறு செய்ததை தாங்கி கொள்ள முடியாத தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அவரது உறவினர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பரமநாதனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்