Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் உணவில் விஷம் கலக்க வாய்ப்பு: பகீர் தகவல்!

சசிகலாவின் உணவில் விஷம் கலக்க வாய்ப்பு: பகீர் தகவல்!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (10:36 IST)
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறப்பு சலுகைகள் அளித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு, தனி சமையலறை உட்பட பல வசதிகளை சிறைத்துறை டிஜிபி சத்தியநாரயணா செய்து கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
 
இதற்காக 2 கோடி ரூபாய் வரை பணம் கை மாறியுள்ளது என சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்து அது தொடர்பான அறிக்கையை அவர் கர்நாடக மாநில டிஜிபி தத்தாவுக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழகம் மற்றும் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால், டிஐஜி ரூபாவின் இந்த குற்றச்சாட்டை டிஜிபி சத்தியநாராயணா முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய போது, சிறையில் மொத்தமாக சமைக்கப்படும் உணவில் சசிகலாவுக்கு விஷத்தை கலந்து வழங்கி விட வாய்ப்பிருப்பதால், சிறை உணவையே அவருக்குத் தனியாக தயாரித்து வழங்கினோம்.
 
பாதுகாப்புக்காகவே இதை செய்தோம். நீதிமன்றம் காட்டிய வழியை நாங்கள் பின்பற்றினோம். ரூபா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதால் அவரிடம் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments