Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி!

கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (10:10 IST)
பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வருகின்றன.


 
 
புகழ் பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்றிருக்கிறார். பல ஆயிரம் பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
 
இவருடைய மகனும் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். நேற்று வரை கவிஞர் வைரமுத்து நல்ல உடல் நலத்துடனேயே இருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது மறைவுக்கு தனக்கே உரித்தான பாணியில் இரங்கல் தெரிவித்தார்.
 
இந்நிலையில் மூச்சு திணறல் காரணமாக கவிஞர் வைரமுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments