Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் தனித்து தான் போட்டியிடுவோம்: அடம்பிடிக்கும் அன்புமணி

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (16:35 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாமக 2300775 வாக்குகளை பெற்று 5.3 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளது.


 
 
எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியது பாமக. அதன் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், மாநிலம் முழுவதும் பாமகவுக்கு 23 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இத்தனை பேர் பாமகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
 
மேலும், நாங்கள் அரசியலை மக்கள் சேவையாக செய்து வருகிறோம். ஆனால் திராவிட கட்சிகள் அரசியலை வியாபாரமாக செய்கின்றனர். திராவிட கட்சிகள் பண பலத்தினால் தான் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். தோல்விகளால் நாங்கள் துவண்டு போய் விடவில்லை, முன்பை விட வேகமாக பணியாற்றுவோம் என்றார்.
 
வருங்காலங்களிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. பாமக தனித்தே போட்டியிடும் என கூறிய நலத்திட்டங்களை மறந்து பணத்துக்காக மக்கள் வாக்களித்தது வருத்தமாக உள்ளது என்றார்.
 
வெற்றி பெற்ற அதிமுக, திமுகவினருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட அன்புமணி, சட்டசபையில் நாங்கள் இடம் பெறாவிட்டாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம் என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பிளஸ் 2 துணைத் தேர்வு..! ஹால் டிக்கெட் வெளியிடும் தேதி அறிவிப்பு..!!

லேப்டாப் சார்ஜ் செய்த பெண் பலி.. இராஜபாளையம் அருகே சோக சம்பவம்..!

பிரபல ஹோட்டலை கையகப்படுத்த அரசுக்கு தடை..! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.!

108 ரூபாய்க்கு 28 நாட்கள் பிளான்.. பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் புதிய திட்டம்..!

திருச்சி எஸ்.ஆர்.எம் ஓட்டல் விவகாரம்: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments