Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல் நிலையம் எதிரே பாமக செயலாளர் படுகொலை

காவல் நிலையம் எதிரே பாமக செயலாளர் படுகொலை
, திங்கள், 12 அக்டோபர் 2015 (22:41 IST)
விழுப்புரம் அருகே காவல் நிலையம் எதிதில், பாமக செயலாளர் மர்ம நபர்களால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
 
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்மணி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளராக உள்ளார்.
 
இஅவர், நேற்று இரவு கண்டமங்கலம் காவல் நிலையம் அருகே நடந்து சென்ற போது, அப்போது, இவரது அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரை வெட்டிக் கொலை செய்து விட்டு, மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.
 
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, விழுப்புரம் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த படுகொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைப்பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.
 
மேலும், அருள்மணி படுகொலையை கண்டித்து, அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். காவல் நிலையம் எதிரே பாமக செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil