Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாமக மாநாடு ஒத்திவைப்பு: ராமதாஸ்

பாமக மாநாடு ஒத்திவைப்பு: ராமதாஸ்

பாமக மாநாடு ஒத்திவைப்பு: ராமதாஸ்
, வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (21:29 IST)
பாமக மாநில மாநாடு பிப்ரவரி 27 ஆம் தேதி வண்டலூர் விஜிபி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பாமக மாநில மாநாடு பிப்ரவரி 14 ஆம் தேதி வண்டலூரில் நடைபெறுவதாக இருந்தது.
 
இந்த மாநாட்டை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில், மாநாட்டுக்கு உயர் நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அதிமுக அரசு மேல்முறையீடு செய்து, தடை வாங்கியது.
 
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது பாமக முன்வைத்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மாநாட்டை திட்டமிட்டபடி நடத்த அனுமதி அளித்துள்ளனர்.
 
ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த தடை காரணமாக கடந்த சில நாட்களாக மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாமல் போனது.
 
எனவே, இந்த மாநாட்டை பிப்ரவரி 27 ஆம் தேதி அதே இடத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil