Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்புமணி பார் சேஞ்ச் மொபைல் அப்ளிகேஷன் துவக்கம்

அன்புமணி பார் சேஞ்ச் மொபைல் அப்ளிகேஷன் துவக்கம்
, வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (03:55 IST)
பாமக சார்பில் அன்புமணி பார் சேஞ்ச் மொபைல் அப்ளிகேஷன் துவக்கப்பட்டது.
 
அன்புமணி பார் சேஞ்ச் என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார்.
 

 
பின்பு, பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பாமக சார்பில், அன்புமணி பார் சேஞ்ச் என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளோம். இந்த  செல்போன் அப்ளிகேஷன் மூலம் கட்சி நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளோம்.
 
ஆன்டிராய்டு செல்போன் வைத்துள்ள அனைவரும் இந்த அப் ஐ டவுன் லோடு செய்யலாம். இதன் மூலம், பாமக நிகழ்ச்சிகளை காணலாம். என்னுடன் தொடர்பு கொண்டு பேசலாம். இந்த புதிய வசதி மூலம் பொது மக்களை நேரடியாக உடனே தொடர்பு கொள்ள முடியும். இந்த முயற்சி தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil