Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக சட்டசபை தேர்தல்: குமரியில் பிரதமர் மோடி பிரச்சாரம்

Webdunia
ஞாயிறு, 8 மே 2016 (09:12 IST)
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேச உள்ளார்.


 

 
 
டெல்லியில் உள்ள பிரதமர் மோடி நாட்டின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரிக்கு வருவதால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இன்று பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் கன்னியகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 17 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
 
இதனால் குமரி மாவட்டத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பகுதியில் மட்டும் சுமார் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கடல்வழி பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குமரிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
 
கன்னியாகுமரியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்தவுடன், பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments