Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு சக்கர நாற்காலி; அனிமேஷன் வீடியோ பாடம்! – பிரதமர் பாராட்டிய தமிழக சிறுமி மற்றும் ஆசிரியர்!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (15:07 IST)
இன்று மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி கொரொனா காலத்திலும் அனிமேஷன் வீடியோ மூலம் பாடம் நடத்திய தமிழக ஆசிரியரை பாராட்டியுள்ளார்.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும் மன் கீ பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.

அதில் அவர் நாய் ஒன்று நடப்பதற்காக சக்கர நாற்காலி செய்த கோவையை சேர்ந்த காயத்ரி என்ற சிறுமியை பாராட்டியுள்ளார். இது நமக்கு ஊக்கமளிப்பதாகவும், மற்ற விலங்குகளிடம் அன்புடன் இருக்கும்போது இது சாத்தியமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோல கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பள்ளி பாடங்களை அனிமேஷன் வீடியோவாக தயார் செய்து பெண்டிரைவ் மூலமாக மாணவர்களுக்கு அளித்த விழுப்புரத்தை சேர்ந்த ஹேமலதா என்ற தமிழ் ஆசிரியரையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments