Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் திருவனந்தபுரம் பயண திட்டத்தில் மாற்றமா? என்ன காரணம்?

Mahendran
சனி, 1 ஜூன் 2024 (14:07 IST)
கன்னியாகுமரியில் கடந்த மூன்று நாட்களாக தியானத்தில் இருந்த பிரதமர் மோடி தியானத்தை முடித்துவிட்டு இன்று திருவனந்தபுரத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருடைய பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானத்தை முடித்துக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருண்டஹ்து.
 
ஆனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பிரதமரின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், வானிலையை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டருக்கு பதிலாக சாலை மார்க்கமாக செல்லவும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
திருவனந்தபுரத்திலிருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments