பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன்: தமிழில் பேசிய பிரதமர்

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (19:13 IST)
மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இன்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, ஒருசில வார்த்தைகள் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தமிழில் வணக்கம் என்று சொல்லி பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி. தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் தான் தலைவணங்குவதாக கூறினார். பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுவதாகவும் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே கல்வி கற்றதாக அர்த்தம் என்றும் தெரிவித்தார்.

முத்ரா யோஜனா திட்டத்தில் பலனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்றும், பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை 26 வாரங்களாக அதிகரித்து தந்துள்ளதாகவும் மோடி பேசினார்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் அரசை விட அதிக நிதியை திட்டக் கமிஷனில் இருந்து தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளதையும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்

இருப்பினும் அனைவரும் எதிர்பார்த்த காவிரி மேலாண்மை குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் ஒழுங்கா பேசு!. ரகசியத்தை டிவில போட்ருவேன்!.. மிரட்டிய பழனிச்சாமி..

ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமை விவகாரம்: எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

2 இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஈரான்.. ஹார்முஸ் நீர்ச்சந்தியில் பரபரப்பு..!

சினிமாவில் மட்டும் இல்லை.. நிஜத்திலும் 10 பேரை அடிப்பாரு விஜய்! சீக்ரெட்டை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

என்ன சப்பன்னு நினைச்சியா!.. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடி அமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் ஈரான்!..

அடுத்த கட்டுரையில்
Show comments