பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன்: தமிழில் பேசிய பிரதமர்

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (19:13 IST)
மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இன்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, ஒருசில வார்த்தைகள் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தமிழில் வணக்கம் என்று சொல்லி பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி. தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் தான் தலைவணங்குவதாக கூறினார். பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுவதாகவும் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே கல்வி கற்றதாக அர்த்தம் என்றும் தெரிவித்தார்.

முத்ரா யோஜனா திட்டத்தில் பலனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்றும், பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை 26 வாரங்களாக அதிகரித்து தந்துள்ளதாகவும் மோடி பேசினார்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் அரசை விட அதிக நிதியை திட்டக் கமிஷனில் இருந்து தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளதையும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்

இருப்பினும் அனைவரும் எதிர்பார்த்த காவிரி மேலாண்மை குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments