Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (07:40 IST)
தமிழகத்தில் இன்று 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைக்கிறார். 
 
தமிழகத்தில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன 
 
ரூ.4000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் வருடத்திற்கு 1450 புதிய டாக்டர்கள் உருவாகி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் திறந்து வைக்கிறார்
 
இந்த காணொளி நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்ட்வியா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்
 
இந்த கல்லூரிகள் திறக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5750 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments