தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (07:40 IST)
தமிழகத்தில் இன்று 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைக்கிறார். 
 
தமிழகத்தில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன 
 
ரூ.4000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் வருடத்திற்கு 1450 புதிய டாக்டர்கள் உருவாகி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் திறந்து வைக்கிறார்
 
இந்த காணொளி நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்ட்வியா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்
 
இந்த கல்லூரிகள் திறக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5750 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments