Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வேஷ்டி கட்டும் பிரதமர் மோடி; மதுரையில் ”மோடி பொங்கல்”!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:45 IST)
மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவிற்காக தமிழகம் வரும் பிரதமர் மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கும் நிகழ்விற்காக பிரதமர் மோடி ஜனவரி 12 அன்று தமிழகம் வர உள்ளார். அதை தொடர்ந்து மதுரையில் தமிழகபாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

”மோடி பொங்கல்” என்ற பெயரில் நடத்தப்பட உள்ள இந்த பொங்கல் நிகழ்ச்சியை மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த தனிக்குழு அமைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். மகாபலிபுரம் சீன அதிபர் சந்திப்பின்போது தமிழர்கள் போல் வேஷ்டி கட்டிய பிரதமர் மோடி, இந்த பொங்கல் நிகழ்ச்சியிலும் தமிழ் பாரம்பரியப்படி வேஷ்டி கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments