Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு அரசுதான் காரணம்!? – பிரதமர் மோடி!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (15:09 IST)
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை அதிகரித்ததற்கு அம்மாநில அரசுகள் வாட் வரியை குறைக்காததே காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வேகமாக விலை உயர்ந்து வந்தது. தற்போது பல பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100க்கும் அதிகமாக உள்ள நிலையில் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து இன்று மாநில முதல் அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “எரிபொருள் மீதான வரியை 2021 நவம்பர் மாதமே மத்திய அரசு குறைத்து விட்டது.  பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்க வேண்டும்.  வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்கள் சில காரணங்களால் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை கேட்கவில்லை என்றும், வரியை குறைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments