பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் எப்போது கிடைக்கும்?

Mahendran
வியாழன், 15 பிப்ரவரி 2024 (17:22 IST)
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி நிறைவடையவுள்ளன. 
 
 மார்ச் 1ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வுடன் தொடங்கி, மார்ச் 22ஆம் தேதி வேதியியல் பாடத் தேர்வுடன் நிறைவடையும். இடைப்பட்ட நாட்களில் கணிதம், கணினியல், வணிகவியல், வேளாண்மை, ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் தேர்வுகள் நடைபெறவுள்ளன 
 
இந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து வெளியாகி உள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுடைய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளம் சென்று வரும் 20ஆம் தேதி முதல் தங்களது ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 சீட், ஒரு துணை முதல்வ, 6 அமைச்சர்கள்.. விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தையை முடித்த ராகுல் காந்தி?

ஈரானில் 787 பேர் போரால் மரணம்.. ஈரான் பதிலடியில் 6 அமெரிக்க வீரர்கள் பலி.. தொடரும் போரால் பதட்டநிலை..!

சமையல் சரியில்லை என்று மாமியார் திட்டியதால்.. பெண் சாப்ட்வேர் இஞ்சினியர் எடுத்த விபரீத முடிவு..!

யோவ் அட்மின்.. உனக்கு ஓவர் நக்கல்.. விஜயை பங்கம் பண்ணிய சன் நியூஸ்!..

ஈரானுடன் போர்!.. ஒரு நாளுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி செலவா?. தலையே சுத்துதே!..

அடுத்த கட்டுரையில்
Show comments