Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிட்டபடி பிளஸ் டூ தேர்வு முடிவு..! இந்த தேதியில் வெளியிடும் பள்ளிக்கல்வித்துறை..!!

Senthil Velan
வெள்ளி, 3 மே 2024 (13:40 IST)
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும்  6ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 
 
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 86 மையங்களில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமையே மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்கள் அனுப்பப்படுகின்றன.

ALSO READ: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! மே 7-ல் ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!!
 
இந்நிலையில் திட்டமிட்டபடி, வரும் மே 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

பாஜக தமிழக துணை தலைவராக குஷ்பு நியமனம்.. முதல் அழைப்பே விஜய்க்கு தான்..!

உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய ரத்தம்.. இந்திய பெண்ணுக்கு செய்த சோதனையில் ஆச்சரியம்..!

நெல்லையில் ஆணவ கொலை.. கைதான சுர்ஜித்தின் தந்தையும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments