Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய வீரர்கள் !!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (16:44 IST)
இன்று தமிழர் திருநாளாம் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் 430 மாடு பிடிவீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க உள்ளனர். மேலும் சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இன்று உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டியில் வீர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில்,8 சுற்றுகள் முடிவில் 520 காளைகள் பங்கேற்றன. 420 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.  சிறந்த காளையாக ஜி.ஆர் காத்திக் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிறந்த மாடு பிடி வீரர்களாக  திருநாவுக்கரசு மற்றும் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் தலா 26 காளைகளைப் பிடித்த  திருநாவுக்கரசு மற்றும் விஜய் ஆகியோருக்கு தலா ஒரு  பைக் பரிசாக வழங்கப்பட்டது.

கடந்தாண்டும் விஜய் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments