Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தார் பியூஷ் கோயல்: கூட்டணி அறிவிப்பு எப்போது?

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (22:30 IST)
பாராளுமன்ற தேர்தல் குறித்த கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ரகசியமாக நடத்தி வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் சற்றுமுன் சென்னை வந்தார். அதிமுக முன்னணி தலைவர்களை சந்தித்து பேசிய பியூஷ் கோயல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளதாகவும், மக்கள் நலனுக்கு உகந்த கூட்டணி அமைக்கப்படும் என்றும், மத்தியில் அடுத்த அமையும் ஆட்சியில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் தரும் வகையிலும் பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமென்றும் கூறினார்.
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 8 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதில் ஆறு தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் இரண்டு சிறிய கட்சிகள் பாஜக சின்னத்தில் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினை ‘அப்பா’ன்னு சொன்னா தப்பா இருக்காது..? - செல்லூர் ராஜூ கிண்டல்!

இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.. எந்தெந்த பகுதிகளில்? - சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை சென்ட்ரலில் இருந்து 2 புதிய மின்சார ரயில்.. எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

சென்னை மாநகராட்சியில் 6 புதிய மண்டலங்கள்.. உங்கள் பகுதி இருக்கிறதா என பாருங்கள்..!

கன்னியாகுமரி ஆலயத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு.. முதல்வரின் நிவாரண உதவி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments