Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (07:02 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக டீசல் விலையும் ஒரு சில நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 99.36 என விற்பனையாகி வருகிறது 
 
அதேபோல் சென்னையில் டீசல் விலை இன்று 28 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.45 என விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments