Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: முடிவே இல்லையா?

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (08:33 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது
 
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே இருந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் சதவீதம் உயர்ந்து கொண்டே இருப்பதுதான் இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன.
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோலின் விலை ரூ.87.18க்கு விற்பனையாகிறது. இன்று மட்டும் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்துள்ளது. அதேபோல் டீசல் விலை ரூ.79.95க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டீசல் விலை இன்று மட்டும் 23 காசுகள் உயர்ந்துள்ளது.
 
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளதை அடுத்து இதற்கு முடிவே இல்லையே என பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments