Webdunia - Bharat's app for daily news and videos

Install App

142வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (07:42 IST)
142வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
கடந்த 141 நாட்களாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
ஓபெக்ஸ் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து விட்டதால் உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
 
ஆனால் உக்ரைன் போரின் போது ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய்யை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ளதால் இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது 
 
ந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments