அதிமுக சின்னம், கொடி பயன்படுத்த நிரந்தர தடை.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு..!!

Senthil Velan
திங்கள், 18 மார்ச் 2024 (14:56 IST)
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி,  அதிமுக-வின் பெயர்,கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
 
இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை,  அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒபிஎஸ் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
 
பின்னர் இந்த வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களும்,  மார்ச் 12ஆம் தேதி முடிவடைந்த நிலையில்,  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் பெயர்,கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ALSO READ: அதிமுக கூட்டணியில் தேமுதிக பாமகவின் நிலை என்ன..? கூட்டணி உறுதியா..?
 
முன்னதாக அதிமுக கட்சி கொடி, சின்னம் ஆகியவை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments