Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை வாழ்த்தியபோது சொன்ன அந்த வார்த்தை..! – அண்ணாமலை மீது புகார்!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (13:08 IST)
சமீபத்தில் பிரதமரை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்ட அண்ணாமலை பட்டியலின மக்களை இழிவுப்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 8 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து சமீபத்தில் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமர் மோடியை வாழ்த்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில் ஆங்கில வார்த்தையான Pariah என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார். அது பட்டியலின மக்களை குறிக்கும் வார்த்தை என்றும், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளதாகவும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியை புகழ்வதாக பட்டியலின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாக பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments