Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்” பேரறிவாளன் தாயின் உருக்கமான டிவீட்

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (11:20 IST)
தனது உயிர் போவதற்குள் 7 பேர் விடுதலை குறித்தான கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது டிவிட்டர் பக்கத்தில் “அமைச்சரவை பரிந்துரைத்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. 29 வருட அநீதியில் உள்ள பங்கு ஒன்றுடன் முடியட்டும், என் உயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்” என உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments