Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திலயே பேசுறார்.. ஒண்ணும் புரியல! – மேனேஜரால் கடுப்பான பொதுமக்கள்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:39 IST)
புதுக்கோட்டை அருகே உள்ள இந்திய வங்கி கிளையின் மேலாளர் இந்தியில் பேசுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளர் இந்தி மட்டுமே தெரிந்தவர் என்பதால் வாடிக்கையாளர்களிடம் இந்தியில் பேசியுள்ளார். அவர் பேசுவது புரியாமல் பொதுமக்களும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

இதனால் பொறுமையிழந்த மக்கள் வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கி மேலாளர் பேசும் இந்தி புரியவில்லை என்றும், இதனால் கடந்த 10 மாத காலமாக தங்களால் கிசான் கார்டு பெற முடியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு தற்போது வலு பெற்று வரும் நிலையில் இந்தியில் பேசுவதால் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments