Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை மீறி பள்ளிவாசலில் தொழுகை – காவல் ஆய்வாளர் இடமாற்றம்!

Webdunia
திங்கள், 25 மே 2020 (15:34 IST)
மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடந்த நிலையில் அதை தடுக்காத காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் பள்ளிவாசல் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ளதால் வீடுகளிலேயே தொழுகை நடத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறையில் செம்பனார் கோவில் அருகே உள்ள பள்ளிவாசல் ஒன்றில் அனுமதியின்றி 75 க்கும் மேற்பட்டோர் கூடி தொழுகை நடத்தியதாக கூறப்படுகிறது. அனுமதியின்றி நடந்த தொழுகையை தடுக்காததால் செம்பனார் கோவில் ஆய்வாளர் அனந்த பத்மநாபன் நாகப்பட்டிணம் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments