Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போ அடகு வெச்சா கடன் தள்ளுபடி உண்டு?! – வதந்தியால் வங்கி முன்பு குவிந்த மக்கள்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (12:21 IST)
நகைகளை தற்போது அடகு வைத்தால் தேர்தலுக்கு பிறகு கடன் தள்ளுபடி என்ற வதந்தியால் மக்கள் வங்கி முன்பு குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகைகளுக்குள் பெறப்பட்ட விவசாய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்னர் நகைகளை அடகு வைத்தால் தேர்தலுக்கு பின் கடன் தள்ளுபடி என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வதந்தியை நம்பி ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் நகைகளை அடகு வைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. பின்னர் வங்கி அதிகாரிகள் மக்களிடம் அந்த மாதிரியான அரசு அறிவிப்பு எதுவும் இல்லை என விளக்கமளித்து அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments