Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி வேன் கவிழ்ந்து விபத்து..! சாலையில் மலைப்போல் குவிந்த தக்காளி! – அள்ளிச் சென்ற மக்கள்!

Prasanth Karthick
வெள்ளி, 1 மார்ச் 2024 (14:02 IST)
திண்டுக்கலில் தக்காளி ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்தான நிலையில் சாலையில் குவிந்த தக்காளியை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.



திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அப்பகுதியில் முக்கிய சந்தை பகுதியாகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வருகின்றன. இந்நிலையில் வேடச்சந்தூர் அருகே 3 டன் தக்காளியை எடுத்துக்கொண்டு மினிவேன் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.

நான்கு வழிச்சாலையில் மினிவேன் வந்துக் கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்ததால் மினிவேன் சாலையில் கவிழ்ந்தது. இதனால் அதில் ஏற்றி செல்லப்பட்ட தக்காளிகள் சாலையில் மலைப்போல் குவிந்தது. இதையறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் பலரும், அந்த சாலை வழியாக சென்றவர்களும் கொட்டிக்கிடந்த தக்காளியை சாக்கு, பிளாஸ்டிக் பை என கிடைத்ததில் அள்ளி சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments