Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருத்தம் தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜியை வருத்தெடுத்த நெட்டிசன்கள்!

Webdunia
புதன், 23 மே 2018 (15:42 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தமிழகத்தை அதிரவைத்துள்ளது. போராடிய மக்கள் மீது அரசு செய்த செயலுக்கு எல்லோரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில், தூத்துக்குடியில் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டது வெட்கக்கேடு. நம் சொந்தங்கள் பலியாகியுள்ளனர். அமைதியான போராட்டம் வன்முறையில் முடிந்ததை பார்க்க வருத்தமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
 
இவரது இந்த பதிவிற்கு பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் ஒருவர், சுட்டவர்களை விட இவரை போன்ற போலி போராளிகள் மீதுதான் எங்களுக்கு கோவம் அதிகமாக வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
 
சிலர், ஜல்லிக்கட்டு முதல் தூத்துக்குடி வரை நமக்கு கற்று தந்த பாடம் என்றும் இவரை போன்ற வீர வசனம் பேசும் சினிமாக்காரர்களை நம்ப கூடாது என்றும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments