Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரே மூழ்கிய கனமழை … கழுத்தளவு தண்ணீரில் சவ ஊர்வலம் – அரியலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் !

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (09:02 IST)
அரியலூர் மாவட்டம் கழுவந்தோண்டி எனும் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்துவிட அவரைக் கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி மக்கள் கொண்டுசென்று அடக்கம் செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்துக்கு அருகில் கழுவந்தோண்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையால் இந்த கிராமமே தண்ணிரில் மூழ்கியுள்ளது. இதனால் இந்த ஊர் வெளியூர்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரில் வசித்து வந்த கோசலம் என்ற மூதாட்டி உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார். அவரது பினத்தை அடக்க பிண ஊர்தி வண்டிகள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.

மயானத்துக்கு செல்லும் ஏரியின் கரை முழுவதும் நீர் நிரம்பியதாலும் கழுத்தளவு தண்ணீர் பாதையை மறைத்துள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் உறவினர்கள் தண்ணீரில் நடந்து சென்றே சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments