ஊரே மூழ்கிய கனமழை … கழுத்தளவு தண்ணீரில் சவ ஊர்வலம் – அரியலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் !

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (09:02 IST)
அரியலூர் மாவட்டம் கழுவந்தோண்டி எனும் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்துவிட அவரைக் கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி மக்கள் கொண்டுசென்று அடக்கம் செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்துக்கு அருகில் கழுவந்தோண்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையால் இந்த கிராமமே தண்ணிரில் மூழ்கியுள்ளது. இதனால் இந்த ஊர் வெளியூர்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரில் வசித்து வந்த கோசலம் என்ற மூதாட்டி உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார். அவரது பினத்தை அடக்க பிண ஊர்தி வண்டிகள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.

மயானத்துக்கு செல்லும் ஏரியின் கரை முழுவதும் நீர் நிரம்பியதாலும் கழுத்தளவு தண்ணீர் பாதையை மறைத்துள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் உறவினர்கள் தண்ணீரில் நடந்து சென்றே சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியவர் எந்த நாட்டு தீவிரவாதி? FBI கண்டுபிடித்த உண்மை..!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments