Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி பட டைலாக்கை பேசிய வாலிபரை பொளந்துகட்டிய மக்கள்

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (08:52 IST)
சென்னையில் பள்ளி மாணவியை வம்பிழுத்த இளைஞரை பொதுமக்கள் பொளந்துகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் மாணவி ஒருவர் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து செல்வார். மாணவி இரண்டு நாட்கள் தனியாக செல்வதை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்து அந்த மாணவியை வழிமறித்தார்.
 
பின்னர் சிவாஜி படத்தில் ரஜினி ஸ்ரேயாவிடம் வாங்க பழகலாம் என கூறுவதுபோல அந்த மாணவியிடம் வா பழகலாம் என கூறி  வாலிபர் வம்பிழுத்துள்ளார். மேலும் மாணவியின் கையை பிடித்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி கூச்சலிட்டுள்ளார். அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டனர். மாணவியை வம்பிழுத்த அந்த வாலிபரை சூழ்ந்த மக்களிடம், வாலிபர் தான் பெரிய இடத்து பையன் என பீட்டர் விட்டுள்ளான். கொலவெறியில் இருந்த மக்கள் அவனை சகட்டுமேனிக்கு அடித்து துவைத்தனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சிறப்பாக கவனித்து வருகின்றனர். இவனை மாதிரியான ஆட்களுக்கு இது சிறப்பான தண்டனை என பலர் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments