Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் தாக்கி இறந்த குரங்கிற்கு இறுதிச் சடங்கு செய்த பொதுமக்கள்

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (07:06 IST)
அனுமந்தபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கிற்கு ஊர் பொதுமக்கள் கூடி, அதற்கு இறுதிச் சடங்கு செய்து புதைத்தனர்.
தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் என்ற கிராமத்தில் குரங்குகள் கூட்டம் நேற்று ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தது.  அந்த கூட்டத்தில் இருந்த குரங்கு ஒன்று அங்குள்ள மின்கம்பியில் ஏறி விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் குரங்கு உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
 
இதனைக்கண்ட அந்த பகுதிமக்கள், குரங்கின் உடலை மீட்டு அதற்கு மாலை அணிவித்தும், பொட்டு வைத்தும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் குரங்கின் உடலை அப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments