Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக்ஜாம் புயல் எதிரொலி: மெரீனாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிப்பு..!

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (16:24 IST)
வங்க கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல் 5 அல்லது 6ஆம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்கரை நுழைவு பாதைகள் மூடப்பட்டுள்ளது.  கடற்கரைக்கு வரும் பொதுமக்களை ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோல் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வரும் பொது மக்களையும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.  தடையையும் தாண்டி பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments