Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் - கலைச்செல்வன் எம்.எல்.ஏ அதிரடி

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (21:00 IST)
தினகரன் ஆதரவாளராக  இருந்தவர்  கலைச்செல்வன் எம்.எல்.ஏ. இவர் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக, தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு இவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட கலைச்செல்வன் எம்.எல்.ஏ , சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
ஜெயலலிதா அமைத்த ஆட்சியை கலைக்க தினகரன் கூறியதை என்னால் ஏற்றுக்கொள்வில்லை. நான் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பேன். அதிமுவில் எங்களுக்கும்  அண்னன் தம்பி பிரச்சனைதான். ஆட்சி கலைப்புக்கு யாரும் சம்மதிக்கமாட்டார்கள்.  முதல்வர் கூறுவதைக் கேட்டு செயல்படுவோம். மேலும் மக்களவைத் தேர்தலில் மக்கள் தினகரனுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர் என்று தெரிவித்தார்.
 
கலைச்செல்வன் எம்.எல்.ஏ முதல்வரை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தினகரன் ஆதரவாளராக கருதப்பட்ட இவர் அதிமுக கட்சிக்கு ஆதரவளித்துள்ளார் என்பதால் தினகரன் கட்சியினர் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே தினகரன் ஆதரவாளராகக் கருதப்பட்ட  ரத்தினசபாபதி எம்.எல்.ஏ நேற்று முதல்வரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments