Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என பொதுமக்கள் வாக்குவாதம்: மரக்காணத்தில் பரபரப்பு..!

Siva
திங்கள், 15 ஜனவரி 2024 (06:30 IST)
பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை என மரக்காணம் அருகே பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்திற்கு ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
 இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கழிக்குப்பம் என்ற பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கப்படவில்லை என தெரிகிறது. 
 
இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பொங்கல் பரிசு தொகுப்புகள் கிடைக்காதவர்களுக்கு உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ரேசன்கடை ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments