Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைப்படத்தில் தெரிந்த பிசாசு உருவம்; அதிர்ச்சியில் மதுரை மக்கள்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:30 IST)
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிசாசு நடமாட்டம் இருப்பதாக வெளியாகி வரும் புகைப்படம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிகளை செய்து வந்துள்ளனர். பொதுவாக வேலை தொடங்கும் போதும், முடியும் போதும் பணி செய்த பகுதியை புகைப்படம் எடுத்து மேல் அதிகாரிகளுக்கு அனுப்புவது வழக்கம். பணிகளை முடித்து வழக்கம்போல புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று பார்த்தவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதில் வேலை பார்த்த இடத்தில் சுடுகாட்டு கரை அருகே கருப்பாக ஒரு உருவம் தெரிந்துள்ளது. இதை மற்றவர்களிடமும் காட்ட அது பிசாசுதான் என இந்த விஷயம் கிராமம் முழுவதும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கிராம மக்கள் அந்த குறிப்பிட்ட சுடுகாட்டு பாதையில் செல்ல அச்சப்படுகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments