Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர பயணம் செல்ல அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (07:13 IST)
அவசர பயணம் செல்ல அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே செல்பவர்களுக்கு காவலர்கல் நூதனமான தண்டனையையும் லத்தியடியும் கொடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவின்போது அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு செல்ல விரும்புபவர்கள் 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணம் செய்ய இருப்பவர்கள் தங்களுடைய பயணத்துக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments