Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 28 ஜூன் 2024 (20:07 IST)
மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா, சட்டமன்றத்தில் நாளை தாக்கலாகிறது என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் தொடர்பான தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருள்கள் தமிழகத்தில் அதிகமாக நடமாடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 60 பேர்களுக்கு மேல் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதுமட்டுமின்றி கஞ்சா உள்பட போதைப் பொருள்களும் அதிகமாக நடமாடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடியாக நாளை சட்டமன்றத்தில் ஒரு புதிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார் 
 
போதைப்பொருள் விற்பனைகளுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையானதாகவும் இல்லை என்றும் தண்டனைகளை கடுமையாக்கி, குற்றங்களையும் முற்றிலும் தடுக்க முதல் கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 இல் திருத்த மசோதா நாளை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வர் ஆகிறார் ஹேமந்த் சோரன்.. சம்பய் சோரன் பதவி விலகல்:

சென்னையில் விடிய விடிய தொடர் கனமழை.. மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்.. என்ன காரணம்?

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments