Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (12:07 IST)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நலமுடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை தெரிவித்துக் கொள்வதாக பழ நெடுமாறன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தஞ்சையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய போது தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார் என்றும் தமிழீழ மக்கள் மற்றும் உலக தமிழர்கள் ஒன்றுபட்டு அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 
 
விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை என்றும் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த காலகட்டத்திலும் எத்தகைய உதவி பெறுவதில்லை என்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்பு தளமாக அதை ஆக்கும் முயற்சிகள் சீனா ஈடுபட்டுள்ளது என்றும் சீனாவின் பிடியில் இருக்கும் அபாயத்தை எண்ணி பார்த்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களும் பிரபாகரனுக்கு துணையாக நிற்க வேண்டிக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments